வங்கதேசத்தில் மேலும் ஒரு இந்து நபர் மீது கொடூர தாக்குதல்
வங்கதேசத்தில்(Bangladesh) மற்றொரு இந்து நபர் ஒரு வன்முறைக் குழுவால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் வங்கதேசத்தின் ஷரியத்பூர்(Shariatpur) மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது, மேலும் இது வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான தொடர் தாக்குதல்களில் சமீபத்தியது.
50 வயதான கோகோன் தாஸ்(Khokon Das) என்று அடையாளம் காணப்பட்ட நபர் வேலை முடிந்து வீடு திரும்பும் வழியில் ஒரு கத்தியால் குத்தப்பட்டு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் அவர் அருகிலுள்ள குளத்தில் குதித்ததால் உயிர் தப்பியுள்ளார்.
இந்நிலையில், “இதை யார் செய்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. எங்களுக்கு நீதி தேவை. என் கணவர் ஒரு எளிய மனிதர், அவர் யாருக்கும் தீங்கு செய்யவில்லை. அவர் யாரையும் காயப்படுத்தவில்லை” என்று கோகோன் தாஸின் மனைவி குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு வாரங்களில் வங்கதேசத்தில் ஒரு இந்து மீது நடத்தப்பட்ட நான்காவது தாக்குதல் இதுவாகும்.





