இலங்கை

மின்சார சட்டத்தின் இறுதி வரைவு ஜுனில் சமர்பிக்கப்படவுள்ளதாக அறிவிப்பு!

புதிய மின்சார சட்டத்தின் இறுதி வரைவு அடுத்த வாரம் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் சட்ட வரைவு ஆசிரியரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மொழிபெயர்ப்பு மற்றும் சான்றிதழ் நோக்கங்களுக்காக குறித்த வரைவு சட்டம் சமர்பிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கை மின்சார சபையின் சீர்திருத்தக் குழு,  அபிவிருத்தி முகவர்களால் வழங்கப்பட்ட சட்ட மற்றும் ஆற்றல் ஆலோசகர்களுடன் தொடர்புடைய சீர்திருத்தங்களுக்கு உதவுவதற்காக புதிய சட்டத்தின் இறுதி வரைவு குறித்து ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துரையாடல் நடத்தப்பட்டது. இதன்போதே மேற்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி  இறுதி வரைவை முடிப்பதற்காக முன்னறிவிக்கப்பட்ட காலக்கெடு திருத்தப்பட்டுள்ளதுஇ எனவே பங்குதாரர்களின் அவதானிப்புகளின் காரணமாக  சட்டத்தின் திருத்தப்பட்ட இறுதி வரைவு முதலில் திட்டமிடப்பட்டிருந்தாலும்இ ஜூன் மாதத்தில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 12 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்