இலங்கை

சனல் 4 தொடர்பில் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாதென அறிவிப்பு

சனல் 4 காணொளி தொடர்பில் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாதது என இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் சார்பில் அருட் தந்தை ஜூட் கிறிசாந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே தந்தை ஜூட் கிரிஷாந்த இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கும் பாதுகாப்பு அமைச்சின் அறிக்கைக்கும் இடையில் முரண்பாடுகள் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கமைய, ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையை ஏற்றுக் கொள்வதா அல்லது ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஏற்றுக் கொள்வதா என்பதில் சிக்கல்கள் எழுந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

“சந்தேக நபர்களுக்கு வெள்ளை சுண்ணாம்பு அடிக்கப்பட்டுள்ளது. அது அவர்களை சரியானவர்கள் என கூறும் முயற்சியாகும். நாங்கள் சுரேஷ் சலேவை தூக்கிலிடச் சொல்லவில்லை.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு சிறைத் தண்டனை வழங்கக் கேட்கவில்லை. அவர்களை குற்றவாளிகள் என்று அறிவிக்கவில்லை. விரிவான விசாரணை நடத்துமாறே நாங்கள் கேட்கிறோம். வெளிப்படையான அறிக்கையை சமர்ப்பிக்கவும். அன்றைய தினம் நீங்கள் சொல்வதை ஏற்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!