இலங்கையில் உணவு பொருட்களை மானிய விலையில் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிப்பு!

இலங்கையில் எதிர்வரும் சிங்கள புத்தாண்டு காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை மானிய விலையில் வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கான ஒரு ஆதரவான நடவடிக்கையாக, பண்டிகைக் காலத்திற்கான உணவுப் பொதியை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது, இதன் மூலம் மக்கள் மலிவு விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்க முடியும்.
இன்று (17) வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை முன்வைத்து ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கூறுகையில், புத்தாண்டு காலத்தில் லங்கா சதோச நிறுவனத்தின் மூலம் அரிசி, டின் மீன், பருப்பு, வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் கருவாடு உள்ளிட்ட உலர் உணவுப் பங்கீட்டை வழங்க முன்மொழியப்பட்டுள்ளது.
இந்தப் பங்கீட்டை வழங்குவதற்கான செலவுக்காக வரவு செலவுத் திட்டத்திலிருந்து ரூ.1,000 மில்லியன் ஒதுக்க முன்மொழியப்பட்டுள்ளது.