மத்திய கிழக்கு

காசாவில் குறைந்தது 11 ஊடகவியலாளர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு!

காசாவில் நடந்து வரும் மோதல் நிலைமையில் குறைந்தது 11 ஊடகவியலாளர்கள் உயிரிழந்துள்ளதாகவும், ஒருவர் காணாமல்போயுள்ளதாகவும் பத்திரிக்கையாளர்களை பாதுகாப்பதற்கான குழுத் தெரிவித்துள்ளது.

காசாவில் அல்லது அதற்கு அருகாமையில் கொல்லப்பட்ட, காயமடைந்த மற்றும் காணாமல் போன ஊடகவியலாளர்கள் பற்றிய கூடுதல் அறிக்கைகளை இந்தக் குழு விசாரித்து வருவதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள  ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழுவின் மத்திய கிழக்கிற்கான ஒருங்கிணைப்பாளர் ஷெரிப் மன்சூர், காசாவில் உள்ள ஊடகவியலாளர்கள் தங்கள் குடும்பங்களை வெளியேற்றுவதற்கும் பாதுகாப்பதற்கும் துடிக்கும்போது தகவல்களைப் பெற முயற்சிக்கின்றனர் என்றார்.

பலர் தங்கள் வீடுகளையும் அலுவலகங்களையும் இழந்துள்ளனர், மேலும் சிலர் மருத்துவமனையில் வேலை செய்கிறார்கள், ஏனெனில் அவர்கள் மின்சாரம் மற்றும் இணையத்தைப் பெறக்கூடிய ஒரே இடம் அங்குதான் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

(Visited 10 times, 1 visits today)

VD

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.