இலங்கையில் வாகன இறக்குமதி தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் வெளியிட்ட அறிவிப்பு
இலங்கையில் வாகன இறக்குமதிகள், 2026 ஆம் ஆண்டில் சாதாரண நிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்டிருக்கும் சந்தைத் தேவையின் அடிப்படையில், 2025 ஆம் ஆண்டுக்குள், இலங்கையர்கள் வாகன இறக்குமதிக்கு சுமார் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிடுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது, ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒரு பில்லியன் டொலரை விட அதிகமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையில், வாகன இறக்குமதி வரிகளைக் கொண்டு இந்தமுறை, வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறையை ஈடு செய்ய முடியும் என்றும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.





