இலங்கை செய்தி

இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு!

இலங்கையில் 2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணை கல்வி நடவடிக்கைகள் ஜனவரி 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார்.

அடுத்த ஆண்டில் ஜனவரி 02 ஆம் திகதி பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு 2 வாரங்களுக்கு மூன்றாம் தவணை கல்வி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமென அவர் குறிப்பிட்டார்.

2025 ஜனவரி 20 ஆம் திகதி அடுத்த ஆண்டுக்கான முதலாம் தவணை கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டு நிறைவு செய்யப்படுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் 2 வாரங்களுக்குள் வௌியிடப்படும் என அவர் கூறினார்.

(Visited 3 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content