இந்தியா செய்தி தமிழ்நாடு

பா.ம.க-விலிருந்து ஜி.கே.மணி அதிரடி நீக்கம்: அன்புமணி ராமதாஸ் உத்தரவு

பாட்டாளி மக்கள் கட்சியின் மூத்த தலைவரும், பென்னாகரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜி.கே.மணி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

கட்சி விரோத செயல்பாடுகளில் ஈடுபட்டதாகக் கூறி, ஜி.கே.மணிக்கு கடந்த 18-ஆம் தேதி பா.ம.க ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இதற்கான விளக்கத்தை அளிக்க வழங்கப்பட்ட காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், அவரிடமிருந்து எந்தப் பதிலும் வராததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இன்று முதல் அமலுக்கு வரும் இந்த நீக்கத்தைத் தொடர்ந்து, ஜி.கே.மணியுடன் கட்சியினர் யாரும் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பா.ம.க-வின் நீண்டகால முகமாக இருந்த ஜி.கே.மணியின் இந்த நீக்கம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Puvan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!