பிரான்ஸில் ரயில் பயணிக்கு எதிர்பாராத நேரத்தில் காத்திருந்த அதிர்ச்சி

பிரான்ஸில் ரயிலுக்குள் நபர் ஒருவரை கத்தியால் தாக்கியவர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
திங்கட்கிழமை மாலை 5.30 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ரயிலில் பயணித்த 30 வயதுடைய ஒருவரை, ஆயுததாரி ஒருவர் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். கைகளில், தொடையில், முதுகில் என குத்தப்பட்டு படுகாயமடைந்துள்ளார்.
அதையடுத்து, அவர் உயிருக்காபத்தான. நிலையில் Pitié-Salpêtrière மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதல் மேற்கொண்டவர் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் செல்ல முற்பட்டபோது, குறித்த தொடருந்து நிலையத்துக்கு அருகே வைத்து கைது செய்யப்பட்டார்.
(Visited 11 times, 1 visits today)