மத்திய கிழக்கு

லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் ஹிஸ்புல்லா மூத்த ராணுவத் தலைவர் உட்பட 14 பேர் கொல்லப்பட்டனர்

லெபனானியத் தலைநகர் பெய்ரூட்டில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 20) இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த ராணுவத் தலைவர் ஒருவரும் இதர மூத்த உறுப்பினர்களும் கொல்லப்பட்டனர்.

லெபனான் எல்லையைச் சுற்றிய பகுதிகளை தம்மால் கைப்பற்ற முடியும் வரை புதிய ராணுவ நடவடிக்கையை தொடரப் போவதாக இஸ்ரேல் சூளுரைத்துள்ளது.

வான்வழித் தாக்குதலில் இப்ராகிம் அகில் எனும் அந்த மூத்த ராணுவத் தலைவரும் இதர மூத்த உறுப்பினர்களும் கொல்லப்பட்டதை இஸ்ரேலிய ராணுவமும் லெபனானில் உள்ள ஒரு பாதுகாப்புத் தரப்பும் உறுதிப்படுத்தின. இதனால், இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.

வான்வழித் தாக்குதலில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டதாக லெபனானிய சுகாதார அமைச்சு தெரிவித்தது. மீட்புக் குழுவினர் இரவு முழுவதும் பணியில் ஈடுபட்ட நிலையில், மரண எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.முன்னதாக, குறைந்தது 66 பேர் காயமுற்றதாகவும் அவர்களில் ஒன்பது பேரின் நிலை கவலைக்கிடமாக இருந்ததாகவும் ராணுவம் கூறியிருந்தது.

இஸ்ரேலியத் தாக்குதல் குறித்தோ அகிலின் மரணத்தை உறுதிப்படுத்தும் விதமாகவோ ஹிஸ்புல்லா அறிக்கை எதையும் வெளியிடவில்லை.

அகில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேலின் இரு நிலைகளைக் குறிவைத்து வெள்ளிக்கிழமை இரவு 8.40 மணிக்கு எறிபடைகளை ஹிஸ்புல்லா பாய்ச்சியதாக அதன் ஊடக அலுவலகம் இரு அறிக்கைகளை வெளியிட்டது.

(Visited 30 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.