இலங்கை

இரண்டுவருடங்களாக விசா இன்றி இலங்கையில் தங்கியருந்த இந்திய பிரஜை கைது!

சட்டவிரோதமாக  கடந்த 02 ஆண்டுகளாக இலங்கையில் தந்தியிருந்த  இந்திய பிரஜை ஒருவர் இன்று (15.07) கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவில் இருந்து சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்த குறித்த நபர் நண்பர் ஒருவருடன் மட்டகளப்பில் தங்கியிருந்துள்ளார்.

நண்பர்கள் இருவரும் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய நிலையில். மட்டகளப்பு பொலிஸார் அவர்களை கைது செய்து விசாரணைகளை நடத்தியுள்ளனர்.

இதன்போது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு  கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த செல்லப்பன் செல்வதுரை என்ற நபர் இலங்கை வந்தது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அவரை கைது செய்துள்ள பொலிஸார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!