இலங்கை செய்தி

இந்தியாவை தொடர்புபடுத்திய மைத்திரி – இராஜதந்திர நெருக்கடி ஏற்படும் சாத்தியம்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுடன் இந்தியாவை தொடர்புபடுத்தி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதாக சமகி ஜன பலவேக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா இன்று தேசிய நாளிதழின் செய்தி ஒன்றை மேற்கோள்காட்டி தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் இந்தக் கூற்று ஒரு இராஜதந்திர நெருக்கடியை கூட உருவாக்கலாம் என  நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலை நடத்தியது யார் என்பது எனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததை அடுத்து, குற்றப்புலனாய்வு திணைக்களம் அவரிடம் 5 மணிநேர வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.

இன்று ஆங்கில ‘தேசிய நாளிதழ்’ ஒன்றில் வெளியான செய்தியை மேற்கோள்காட்டி  நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.

(Visited 24 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!