இலங்கை

ஹிக்கடுவ பகுதியில் 18 வயதுடைய பெண் ஒருவர் மாயமாகியுள்ளதாக தகவல்!

கடந்த 15ஆம் திகதி முதல் 18 வயதுடைய யுவதியொருவர் காணாமல் போயுள்ளதாக ஹிக்கடுவ பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

காலி தொடம்துவ பிரதேசத்தில் வசிக்கும் இவர், 15 ஆம் திகதி  காலி பிரதான பேருந்து நிலையத்தில் இருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியிருந்தார்.

இவரைப் பற்றி தகவல் தெரிந்தால் பொதுமக்கள் தமக்கு தகவல் தெரிவிக்குமாறு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இது குறித்து அவரது தாயார் கூறுகையில், “கடந்த 17ம்  திகதி இரவு 9.28 மணிக்கு போன் வந்தது. என் பொண்ணுதான் போன் பண்ணியது. ப்ளீஸ் அம்மா என்னைத் தேடாதீங்க. நான் வர மாட்டேன். போலீசுக்கு போக வேண்டாம். அதே சமயம், அங்கிருந்த ஒரு பெண் என்னிடம் போலீசுக்கு போக வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்” எனக் கூறியுள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!