விளையாட்டு

18 வருட கனவு.., முதல் முறையாக கோப்பை வென்றது RCB அணி.!

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் இடையே நடைபெற்றது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 190 ரன்களை குவித்தது.

ஆனால், இந்த போட்டியில் டாஸில் தோல்வி அடைந்தாலும், போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி முதல் முறையாக மகுடத்தை முத்தமிட்டிருக்கிறது பெங்களூரு அணி.

முதலில் பேட்டிங் செய்த ஆர்சி பிஅணி சார்பாக தொடக்க ஆட்டக்காரர் சால்ட் ஆரம்பமே அதிரடியாக ஆடினாலும் அடுத்த ஓவர் வரை கூட நீடிக்கவில்லை. விராட் கோலியும், அகர்வாலும் நிதானமாக ஆடினாலும், மறுபுறம் பஞ்சாப் பவுலர்கள் விக்கெட்டுகளை சாய்க்க தொடங்கினர். இந்த ஜோடியை பிரித்ததும், அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர்.

பில் சால்ட் 9 பந்துகளில் 16ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் பிறகு, அர்ஷ்தீப் பந்துவீச்சில் மயங்க் அகர்வாலை கேட்ச் கொடுத்து ஆட்டாக, பின்னர், கேப்டன் ரஜத் படிதர் 26 ரன்கள் எடுத்து கைல் ஜேமிசன் பந்து வீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, விராட் கோலி 35 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து உமர்ஜெய் பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார், அவர் அரைசதத்தை தவறவிட்டார்.

கோலி வெளியேறிய பிறகு, லிவிங்ஸ்டோன் ஐந்தாவது விக்கெட்டுக்கு ஜிதேஷ் சர்மாவுடன் (10 பந்துகளில் 24, இரண்டு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்சர்கள்) 36 ரன்கள் கூட்டணியை பகிர்ந்து கொண்டார். ஆர்சிபி அணி 200 ரன்களை கடப்பதை அர்ஷ்தீப் சிங் தடுத்தார். இறுதி ஓவரில் அவர் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரொமாரியோ ஷெப்பர்ட் (9 பந்துகளில் 17), க்ருணால் பாண்டியா (5 பந்துகளில் 4) மற்றும் புவனேஷ்வர் குமார் (1) ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். பஞ்சாப் அணிக்காக கைல் ஜேமிசன் மற்றும் அர்ஷ்தீப் சிங் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். உமர்சாயைத் தவிர, யுஸ்வேந்திர சாஹல் மற்றும் விஜய்குமார் வைஷாக் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளுக்கு 190 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. வீரர்கள் இல்லாத பக்கமாக பார்த்து பஞ்சாப் வீரர்கள் பந்தை தூக்கியடித்து ரன்களை சேர்த்து வருகின்றனர். மறுபுறம் ஆர்சிபி அணியும் ஃபீல்டிங்கில் சொதப்பி வருகிறது. 5 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 43 ரன்களை சேர்த்தது.

பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் பிரியான்ஷ் ஆர்யா 24 ரன்கள் எடுத்து ஜோஷ் ஹேசில்வுட் பந்தில் ஆட்டமிழந்தார். பிரப்சிம்ரன் சிங் 26 ரன்கள் எடுத்து குருணால் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு ரன் எடுத்து ஆட்டமிழந்தார், ஜோஷ் இங்கிலீஷ் 39 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். நேஹல் வதேராவுக்குப் பிறகு, புவனேஷ்வர் வீசிய 17வது ஓவரில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக யாஷ் தயால் உமர்சாயை கேட்ச் கொடுத்து அவுட்டாக்கினார். அவரால் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. நேஹல் 15 ரன்கள் எடுத்தும், ஸ்டோய்னிஸ் 6 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தார். இறுதி வரை போராடிய பஞ்சாப் அணியால் ஏழு விக்கெட்டுகளுக்கு 184 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

(Visited 1 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ