இலங்கை செய்தி

இஸ்ரேலில் விசா காலாவதியாகிய இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு

விசா காலாவதியாகியதன் காரணமாக பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ளும் இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு காலம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவரிடம் வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இது தொடர்பில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமைச்சரின் கோரிக்கையை இஸ்ரேல் அரசாங்கத்திடம் துரிதமாக முன்வைக்க நடவடிக்கை எடுப்பதாக இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர் ஒப்புக்கொண்டதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இஸ்ரேலில் பல்வேறு துறைகளில் தற்போது பெருமளவான இலங்கையர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இலங்கையர்களுக்கு அதிக தொழில்வாய்ப்புகளை வழங்க இஸ்ரேல் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றது.

இலங்கைக்கான இஸ்ரேலிய தூதுவர் இதன்போது தெரிவித்ததாக வௌிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

(Visited 10 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை