இலங்கை

இலங்கை கடற்பகுதியை பாதுகாக்கும் அமெரிக்காவின் விசேட விமானம்!

இலங்கைக்கு விமானமொன்றை வழங்குவதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளது.

கடற்பகுதியின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இந்த விசேட விமானம் வழங்கப்படவுள்ளது.

இந்தோ – பசிபிக் மூலோபாயம் குறித்து அமெரிக்க அமைதி நிறுவகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவிச் செயலாளர் டொனால்ட் லூ இதனை அறிவித்துள்ளார்.

நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் நோக்கில், இலங்கையின் கரையோரக் கடற்பரப்பில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக இந்த வருடம் அமெரிக்க அரசாங்கம் பீச்கிராப்ட் கிங் ஏர் விமானத்தை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இலங்கையின் இறையாண்மையைப் பாதுகாக்க உதவுவது அமெரிக்கா உட்பட பிற நாடுகளுக்குத் தேவையாகவுள்ளதாகவும் டொனால்ட் லூ இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரம் இலங்கையானது ஒரு வரலாற்று பொருளாதார மீட்சியை பெற்றுள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் சிறிய உதவியால் இலங்கையினால் இந்த தடையை தாண்டுவதற்கு முடிந்ததாகவும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவிச் செயலாளர் டொனால்ட் லூ தெரிவித்துள்ளார்.

(Visited 9 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content