இலங்கை

அளுத்கம – முகத்தில் வெட்டு காயங்களுடன் பெண்ணொருவர் மர்மமாக உயிரிழப்பு!

வெட்டுக்காயங்களுடன் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்ததாக அளுத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்தச் சம்பவம் நேற்று (17) இரவு 08.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மொரகல்ல – கலவிலவத்த பகுதியைச் சேர்ந்த எஸ்.ஷிராணி லக்ஷிகா குமாரி என்ற 47 வயதுடைய பெண்ணே உயிரிழந்ததார்.உயிரிழந்த பெண் முகத்தில் வெட்டுக்காயங்களுடன் வீட்டில் கிடந்ததாகவும், அவர் பேருவளை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, பொலிஸாரின் விசாரணைகளின் போது, ​​வீட்டின் படுக்கையறை, நடைபாதை மற்றும் வீட்டின் முன் கதவுகளுக்கு அருகில் இரத்தக் கறைகள் காணப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இச்சம்பவத்தின் போது உயிரிழந்த பெண்ணின் கணவர், மகன் மற்றும் மகள் ஆகியோர் வீட்டில் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், வீட்டின் முன் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் படுகாயமடைந்த தமது தாயை வைத்தியசாலையில் அனுமதித்ததாக அவர்கள், பொலிஸாரிடம் தெரிவித்தனர்.தற்போது கொலை செய்யப்பட்டுள்ள பெண்ணின் கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளிடமும் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த மர்ம கொலையை வீட்டில் உள்ளவர் செய்தார்களா? அல்லது வெளியில் இருந்து வந்தவர்கள் செய்வார்களா? என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

(Visited 4 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content