பின்லாந்து நாடாளுமன்றத்தின் அனைத்து அலுவலகங்களை மூட உத்தரவு!

பின்லாந்து நாடாளுமன்றத்தின் அனைத்து அதிகாரப்பூர்வ அலுவலகங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உடல் அந்நாட்டு பாராளுமன்ற கட்டட தொகுதிக்குள் கண்டுப்பிடிக்கப்பட்டதை தொடர்ந்து மேற்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
நாட்டின் சமூக ஜனநாயகக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் எமிலி பெல்டோனனின் (30) உடலே மேற்படி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அவர் நாடாளுமன்றக் கட்டிடத்திற்குள் தற்கொலை செய்து கொண்டதாக நம்பப்படுகிறது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
(Visited 1 times, 1 visits today)