உலகம் செய்தி

அலெக்ஸி நவல்னியின் உடல் பலத்த பாதுகாப்புடன் நல்லடக்கம்

ஆர்க்டிக் பகுதியில் உள்ள சிறை அறையில் மரணமடைந்த ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியின் உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டது.

தலைநகர் மாஸ்கோவிற்கு  அருகிலுள்ள ஒரு பகுதியில் உள்ள ஒரு கல்லறையில் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

உடல் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்பு, மாஸ்கோவில் உள்ள தேவாலயத்தில் இறுதி சடங்கு நடைபெற்றது.

பொது மக்கள் ஆராதனையில் பங்கேற்கவோ, அடக்கம் செய்யும் இடத்திற்கு செல்லவோ வாய்ப்பளிக்கவில்லை.

அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, ஏராளமான பொலிசார் பாதுகாப்புக்காக வரவழைக்கப்பட்டனர்.

எவ்வாறாயினும், கைது செய்யப்படும் அபாயத்தையும் பொருட்படுத்தாமல், ஏராளமான ரஷ்யர்கள் தேவாலயத்தைச் சுற்றி திரண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தேவாலயத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டதும், அவர்கள் அலெக்ஸி நவல்னியின் பெயரை கோஷமிட்டனர்.

(Visited 12 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி