இலங்கையின் தலைநகரம் உள்ளிட்ட பகுதிகளில் மோசமடைந்துள்ள காற்றின் தரம் – மக்களுக்கு எச்சரிக்கை!

இலங்கை – கொழும்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்றதாக காணப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
காற்றின் தரக் குறியீடானது 58 முதல் 120 வரை பதிவாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், கொழும்பு, காலி, திருகோணமலை, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் அனுராதபுரம் ஆகிய பகுதிகளில் இந்த எண்ணிக்கை ஆரோக்கியமான அளவில் இல்லை என்றும் மற்ற பகுதிகளில் இது மிதமான மட்டத்தில் இருக்கும் என்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
(Visited 11 times, 1 visits today)