மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவிற்கான விமான சேவையை மீண்டும் தொடங்கிய ஏர் இந்தியா

கத்தாரில் உள்ள அமெரிக்காவின் அல் உதெய்த் விமானத் தளத்தின் மீது ஈரான் ஏவுகணைகளை வீசியதால், பல பகுதிகளுக்கான விமானங்களை நிறுத்திய ஏர் இந்தியா, இன்று முதல் மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவிற்கான சேவைகளை மீண்டும் தொடங்கியுள்ளது.
கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் குவைத் போன்ற நாடுகள் தங்கள் வான்வெளியை மூடியதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு, ஐரோப்பா, அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை மற்றும் கனடாவிற்கான விமானங்களை ஏர் இந்தியா நிறுத்தியது.
ஒரு அறிக்கையில், ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர், “மத்திய கிழக்கின் சில பகுதிகளில் வான்வெளிகள் படிப்படியாக மீண்டும் திறக்கப்படுவதால், ஏர் இந்தியா இன்று முதல் அந்தப் பகுதிக்கான விமானங்களை மீண்டும் தொடங்கும், மத்திய கிழக்கிற்கான மற்றும் பெரும்பாலான நடவடிக்கைகள் ஜூன் 25 முதல் மீண்டும் தொடங்கும். முன்னர் ரத்து செய்யப்பட்ட ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான விமானங்களும் இன்று முதல் மீண்டும் தொடங்கப்படுகின்றன, அதே நேரத்தில் அமெரிக்கா மற்றும் கனடாவின் கிழக்கு கடற்கரைக்குமான சேவைகள் விரைவில் மீண்டும் தொடங்கும்.” என தெரிவித்துள்ளது.
சில விமானங்கள் தாமதமாகலாம் அல்லது ரத்து செய்யப்படலாம் என்றும், பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்பற்ற அனைத்து வான்வெளிகளையும் தவிர்ப்போம் என்றும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.