உலகம்

ஏர் இந்தியா விபத்து – போயிங் 787 விமானங்கள் தொடர்பில் அமெரிக்க அதிகாரிகள் வெளியிட்ட தகவல்

ஏர் இந்தியா விபத்தையடுத்து போயிங் 787 ரக விமானத்தைச் சேவையிலிருந்து நிறுத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தது.

எனினும் தற்போது அதனை நிறுத்த தேவை ஏற்படவில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்தியாவில் ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியதை அடுத்து அமெரிக்காவின் போக்குவரத்து அமைச்சர் ஷொன் டபியும் மத்திய விமானத்துறை நிர்வாகத் தலைவர் கிரிஸ் ரோஷேலியுவும் செய்தியாளர் கூட்டத்தில் அவ்வாறு கூறினர்.
விமானங்களை உடனடியாக நிறுத்தும் தேவையைக் குறிக்கும் எந்தப் பாதுகாப்பு தரவும் வெளிவரவில்லை என்று இருவரும் கூறினர்.

அதுபோன்ற தகவல் ஏதும் தெரியவந்தால் விமானங்களைச் சேவையிலிருந்து அகற்ற அமெரிக்கா தயங்காது என்று அவர்கள் தெரிவித்தனர்.

பாதுக்காப்பே அதிமுக்கியம் என்று வலியுறுத்தப்பட்டது. போயிங் 787 ரக விமானம், உலகிலேயே பாதுகாப்பு அம்சங்கள் அதிகம் உள்ள விமானங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது.

விபத்துக்குப் பிறகு, போயிங் நிறுவனத்தின் பங்கு விலைகள் கிட்டத்தட்ட 5 விழுக்காடு சரிந்தன.

(Visited 1 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்