இந்தியா இன்றைய முக்கிய செய்திகள்

ஏர் இந்தியா விபத்து – மரபணுச் சோதனை மூலம் அடையாளம் காணப்பட்ட 200 போர்

ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த 200க்கும் அதிகமானோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மரபணுச் சோதனை மூலம் அவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டதாக இந்திய அதிகாரிகள் கூறினர்.

கடந்த வியாழக்கிழமை இந்தியாவின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது.

அதில் 242 பயணிகள் இருந்தனர். ஒருவர் மட்டுமே உயிர்பிழைத்தார். விமானம் குடியிருப்புப் பகுதியில் விழுந்ததில் அங்கு இருந்த சுமார் 38 பேர் உயிரிழந்துள்ளனர்.

அந்த விமானம் லண்டன் செல்லவிருந்தது. விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

விமானத்தின் தகவல், குரல் பதிவுப் பெட்டிகள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து தகவல்களைப் பெறும் முயற்சியில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.

(Visited 22 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
Skip to content