இலங்கை செய்தி

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் பாகங்கள் அகற்றல்

நேற்றைய தினம் வென்னப்புவவின் (Wennappuwa) லுனுவிலா (Lunuwila) பகுதியில் விமானப்படையைச் சேர்ந்த பெல் 212 (Bell 212)எனும் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது அதை இன்று சம்பவ இடத்திலிருந்து அகற்றியுள்ளனர்.

இந்த விபத்துச் சம்பவம் குறித்து விசாரிப்பதற்காகச் சிரேஷ்ட விமானப்படை அதிகாரிகள் அடங்கிய ஒன்பது பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த ஹெலிகாப்டர், வெள்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது.

திடீரென லுனுவிலா பாலத்திற்கு அருகில், ஹெலிகாப்டர் கின் ஓயா (Gin Oya) ஆற்றுக்குள் விழுந்தது.

விமானிகள் பாதுகாப்பாக தரையிறங்க முயன்றும், ஹெலிகாப்டர் கின் ஓயாவில் விழுந்தது.

உடனடியாக உள்ளூர் மக்களும் மீட்புக் குழுக்களும் விரைவாகச் செயல்பட்டுஹெலிகாப்டரில் இருந்த அதிகாரிகள் அனைவறையும் மீட்டு மாரவிலா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இருப்பினும், ஹெலிகாப்டரின் விமானியான, 41 வயதான விங் கமாண்டர் நிர்மல் சியம்பலாபிட்டியா (Wing Commander Nirmal Siyambalapitiya) உயிரிழந்தார்.

சமீபத்திய வெள்ளம் மற்றும் மண்சரிவு பேரிடரின்போது, முப்படைகள், காவல்துறை, தீயணைப்புப் படை மற்றும் மீட்புக் குழுக்களுடன் இணைந்து, இலங்கை விமானப்படை விரிவான மனிதாபிமான நடவடிக்கைகளை (extensive humanitarian operations) மேற்கொண்டு அத்தியாவசிய உதவிகளை வழங்கி வருகிறது.

AJ

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!