செய்தி வட அமெரிக்கா

கனடாவில் ஊதிய சலுகையை நிராகரித்த ஏர் கனடா விமான பணிப்பெண்கள் – விமான சேவை பாதிக்கப்படுமா?

கடந்த மாதம் தொழிற்சங்கமும் விமான நிறுவனமும் ஒப்புக்கொண்ட முதலாளியின் ஊதிய சலுகையை சுமார் 10,000 ஏர் கனடா விமான பணிப்பெண்கள் நிராகரித்து வாக்களித்துள்ளனர்.

ஏர் கனடாவில் உள்ள விமான பணிப்பெண்கள் சனிக்கிழமை ஒரு தற்காலிக புதிய ஒப்பந்தத்தில் வாக்களித்தனர். அவர்களில்  99.1% பேர் விமான நிறுவனத்தின் ஊதிய சலுகையை நிராகரித்துள்ளனர்.

இரு தரப்பினரும் முன்பு ஒப்புக்கொண்டது போல் ஊதியப் பகுதி இப்போது மத்தியஸ்தத்திற்கு பரிந்துரைக்கப்படும் என்று விமான நிறுவனம் கூறுகிறது.

“ஏர் கனடாவும் CUPE-யும் இந்த சாத்தியமான முடிவைப் பற்றி யோசித்து, தற்காலிக ஒப்பந்தம் அங்கீகரிக்கப்படாவிட்டால், ஊதியப் பகுதி மத்தியஸ்தத்திற்கும், அந்த கட்டத்தில் எந்த உடன்பாடும் எட்டப்படாவிட்டால், நடுவர் மன்றத்திற்கும் பரிந்துரைக்கப்படும் என்று பரஸ்பரம் ஒப்புக்கொண்டன,” என்று விமான நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் தொழிலாளர் இடையூறு எதுவும் தொடங்கப்பட முடியாது என்றும், எனவே வேலைநிறுத்தம் அல்லது கதவடைப்பு இருக்காது என்றும், விமானங்கள் தொடர்ந்து இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!