செய்தி வட அமெரிக்கா

AI ஐப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பாடல்களில் பணம் சம்பாதித்த அமெரிக்கருக்கு எதிராக வழக்கு

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பாடல்களுக்காக சுமார் 10 மில்லியன் டாலர்கள் சம்பாதித்ததாகக் கூறப்படும் அமெரிக்கர் ஒருவர் அந்நாட்டு நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், சம்பந்தப்பட்ட சந்தேக நபர் ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட பாடல்களை போலியாக கேட்பவர்களை (போட்கள்) கேட்க வைத்து மோசடி செய்து பணம் சம்பாதித்துள்ளது தெரியவந்துள்ளது.

52 வயதான மைக்கேல் ஸ்மித் என்ற தொழில்முறை இசைக்கலைஞர் கைது செய்யப்பட்டு, AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பாடல்களில் இருந்து பணம் சம்பாதித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

தெற்கு நியூயார்க் வழக்கறிஞர் டாமியன் வில்லியம்ஸ், இந்தச் செயலின் மூலம், தற்போதுள்ள ஊடக விதிகளை (ஸ்ட்ரீமிங் பிளாட்ஃபார்ம்கள்) மீறி, இசைத்துறையில் ஈடுபட்டுள்ள படைப்பாளிகளுக்கு அநீதி இழைத்ததாகக் கூறியிருந்தார்.

(Visited 35 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!