இலங்கை

இலங்கை மருத்துவர் பாலியல் வன்புணர்வு சம்பவம்: சந்தேக நபர் தொடர்பில் வெளியான தகவல்

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் பாதிக்கப்பட்ட பெண்ணால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அனுராதபுரம் பிரதான நீதவான் நாலக சஞ்சீவ ஜயசூரிய முன்னிலையில் இடம்பெற்ற அடையாள அணிவகுப்பின் போது பாதிக்கப்பட்ட வைத்தியர் சந்தேக நபரை அடையாளம் கண்டுள்ளார்.

இந்த அடையாள அணிவகுப்பு அனுராதபுரம் பிரதான நீதவான் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று இடம்பெற்றது.

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் கடந்த மார்ச் மாதம் 10ஆம் திகதி சந்தேகநபரால் கத்தி முனையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் வைத்தியர் அவரது உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் வன்புணர்வு செய்யப்பட்டார்.

சம்பவத்தை தொடர்ந்து குறித்த நபர் பெண் வைத்தியரின் கைத்தொலைபேசியுடன் தப்பிச் சென்றுள்ளார்.

திருடப்பட்ட கையடக்கத் தொலைபேசியைக் கண்காணித்து பொலிஸாரால் அவரைக் கண்டுபிடிக்க முடிந்த நிலையில், மறுநாள் கல்நேவ பிரதேசத்தில் குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்தை கண்டித்து மருத்துவ சங்கத்தினர் டோக்கன் வேலை நிறுத்தத்தை நடத்தினர்.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!