இந்தியாவுடன் எட்டப்பட்ட ஒப்பந்தம் – வரி குறைப்பை அறிவித்தார் ட்ரம்ப்!
இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பில் ட்ரம்ப் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த 25 சதவீத வரியை 18 சதவீதமாகக் குறைக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திய பிறகு, வரிகளைக் குறைக்க ட்ரம்ப் நிர்வாகம் இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வரி குறைப்பை தொடர்ந்து கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் மோடி, அமெரிக்காவுடன் ஒரு உடன்பாட்டை எட்டியதில் மகிழ்ச்சி அடைவதாக கூறியுள்ளார்.
கிட்டத்தட்ட இரண்டு தசாப்த கால பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியா சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை எட்டியதும் குறிப்பிடத்தக்கது.




