இந்தியா

அதானி விவகாரம்: ரோஜாப்பூ கொடுத்து நூதனப் போராட்டதில் ஈடுபட்ட இண்டியா கூட்டணி எம்பிக்கள்

அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தும் நோக்கில் இண்டியா கூட்டணி எம்பிக்கள் புதன்கிழமை (டிசம்பர் 11) நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.

நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பாக வாசலில் குழுமிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட இண்டியா கூட்டணி எம்பிக்கள், நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த பாஜக எம்பிக்களுக்கு ரோஜாப்பூ மற்றும் தேசியக்கொடியைப் பரிசளித்தனர்.

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு ராகுல் காந்தி ரோஜாப்பூ மற்றும் தேசியக்கொடியை பரிசளித்தார். ஆனால், அவற்றை வாங்க ராஜ்நாத் சிங் மறுத்தார்.

இதுபற்றி செய்தியாளர்களிடம் காங்கிரஸ் எம்பி வர்ஷா கெய்க்வாட் கூறும்போது, “துரதிர்ஷ்டவசமாக, தற்போது அதானிதான் நாட்டை வழிநடத்துகிறார் என்பதைப் பார்க்கிறோம்.

“அனைத்தும் அவருக்குத்தான் கொடுக்கப்படுகின்றன. ஏழைகளின் குரல் நசுக்கப்படுகிறது. நாட்டை விற்கும் சதிக்கு எதிராக நாங்கள் இருக்கிறோம்,” என குறிப்பிட்டார்.

மற்றொரு காங்கிரஸ் எம்பி சுக்தியோ பகத் கூறுகையில், “பாஜக அரசு நாடாளுமன்றத்தைத் தவறாக நடத்துகிறது.

“அதானியின் பெயர் வந்தவுடனேயே அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படுகின்றன. நாடாளுமன்ற நடத்தைக்கு உட்பட்டே நாங்கள் தேசியக் கொடியையும் ரோஜாப்பூவையும் விநியோகிக்கிறோம்,” என்று கூறினார்.

(Visited 14 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!