பீகாரில் $3 பில்லியன் செலவில் மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் அதானி குழுமம்

அதானி குழுமம் பீகாரில் 3 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 26,482 கோடி) முதலீட்டில் 2,400 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அதி முக்கிய மின் உற்பத்தி நிலையத்தை அமைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.
பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள பிர்பைன்டியில் அமைக்கப்படவுள்ள இந்த திட்டத்திலிருந்து மின்சாரம் வழங்குவதற்காக பீகார் மாநில மின் உற்பத்தி நிறுவன லிமிடெட் (BSPGCL) உடன் 25 ஆண்டு மின் விநியோக ஒப்பந்தத்தில் (PSA) கையெழுத்திட்டுள்ளதாக அதானி குழும நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதானி நிறுவனம் 1 கிலோவாட் மணிக்கு ரூ.6.075 என்ற மிகக் குறைந்த விநியோக விகிதத்தை வழங்கி திட்டத்தை வென்றது.
வடிவமைப்பு, கட்டுமானம், நிதி, சொந்தம் மற்றும் இயக்குதல் (DBFOO) மாதிரியின் கீழ் புதிய ஆலை (800 MW X 3) மற்றும் அதன் துணை உள்கட்டமைப்பைக் கட்டுவதற்கு தோராயமாக 3 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிறுவனம் 60 மாதங்களில் ஆலையை செயல்பாட்டுக்கு கொண்டுவர இலக்கு வைக்கப்பட்டுள்ளது.