செய்தி தமிழ்நாடு

கைப்பந்து போட்டியை தொடங்கி வைத்த நடிகர் சாய் தீனா

குன்றத்தூர் அடுத்த சிறுகளத்தூர் ஊராட்சியில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது.

இதில் தமிழகம்,பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 38க்கும் மேற்பட்ட அணி வீரர்கள் பங்கு பெற்றனர்.

இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் பகல், இரவு ஆட்டங்களாக நடைபெற்றது.

இதில் இறுதியாக பாண்டிச்சேரி அணி வெற்றி பெற்று கோப்பையும், பரிசுத்தொகையும் பெற்றனர்.

இதில் திரைப்பட நடிகர் சாய் தீனா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விளையாட்டு வீரர்களிடம் கைப்பந்தை வீசி போட்டியை தொடங்கி வைத்து அவர்களுடன் விளையாடினார்.

மேலும் முன்னாள் அமைச்சர் சரோஜாவும் கலந்து கொண்டு வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

விளையாட்டு துறையில் இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக பகல், இரவு ஆட்டங்களாக மின்னொளி கைப்பந்து போட்டி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

NR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!