நீர் கட்டணத்தை மீளாய்வு செய்ய நடவடிக்கை!

அடுத்த சில மாதங்களில் நீர் கட்டணத்தை மீளாய்வு செய்யவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
புதிய நீர் கட்டண சூத்திரம் மற்றும் நீர் கட்டண கொள்கையும் எதிர்வரும் காலங்களில் அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சின் செயலாளர் ஆர்.எம்.டபிள்யூ.எஸ்.சமரதிவாகர தெரிவித்துள்ளார்.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் நிதி நிலைத்தன்மையைப் பேணுவதுடன், அடுத்த திருத்தத்தில் நீர்க் கட்டணத்தை மீளாய்வு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 13 times, 1 visits today)