இலங்கை செய்தி

கொழும்பில் அபாயகரமான கட்டிடங்களை அகற்ற நடவடிக்கை

கொழும்பு நகர எல்லைக்குள் உள்ள அங்கீகரிக்கப்படாத குடியிருப்புகள் மற்றும் கட்டிடங்களை அகற்ற கொழும்பு மாநகர சபை (CMC) தீர்மானித்துள்ளது.

வியாழன் (ஜனவரி 18) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கொழும்பு பிரதான சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ருவன் விஜேமுனி, இது தொடர்பில் சட்டவிரோத குடியேற்றங்கள் மற்றும் கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்படும் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களுக்கு அந்த மக்களைப் பரிந்துரைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்படி, அவர்கள் திம்பிரிகஸ்ய கிருல அபேயாராம வீடமைப்பு வளாகம், குணானந்த வீடமைப்பு வளாகம், கொழும்பு 13 வீடமைப்பு வளாகம் மற்றும் மாளிகாவத்தை, கொட்டாஞ்சேனை மற்றும் ஜும்மா மஜித் வீதி ஆகிய வீட்டுத் தொகுதிகளில் தங்கவைக்கப்படவுள்ளனர்.

(Visited 3 times, 1 visits today)
See also  இலங்கை பொதுத் தேர்தல் : கட்டுப்பணத்தை செலுத்திய சுயேட்சை குழுக்கள்!
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content