இலங்கையில் 300இற்கும் மேற்பட்ட சிறைக் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை!

இலங்கையில் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு 300இற்கும் மேற்பட்ட சிறை கைதிகள் பொது மன்னிப்பின்கீழ் விடுதலை செய்யப்படவுள்ளனர்.
மொத்தம் 389 சிறை கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அவர்களில் நான்கு பெண் கைதிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
(Visited 10 times, 1 visits today)