நைஜரில் இருந்து பிரெஞ்சு நாட்டவர்களை மீள அழைக்க நடவடிக்கை

நைஜரில் உள்ள பிரெஞ்சு குடிமக்கள் உடனடியாக திரும்பப் பெறப்படுவார்கள் என்று நைஜரில் உள்ள பிரெஞ்சு தூதரகம் அறிவித்துள்ளது.
இவர்களை விமானம் மூலம் பிரான்ஸ் அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக பிரான்ஸ் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.
நைஜரில் சமீபத்தில் நடந்த போராட்டங்களின் போது, நைஜர் பாதுகாப்புப் படைகள் அதிபர் முகமது பாசுமின் ஆட்சியில் இருந்து அதிகாரத்தைக் கைப்பற்ற முயன்றனர்.
நைஜர் மாநிலத்தில் இராணுவ சதிப்புரட்சிக்கு பின்னர் நைஜரின் புதிய தலைவராக செயற்படப்போவதாக அந்நாட்டு அரச தொலைக்காட்சியில் ஜெனரல் அப்துர்ரஹ்மானே தியானி அறிவித்தார்.
(Visited 18 times, 1 visits today)