இலங்கையின் மேலும் சில பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க நடவடிக்கை!

கம்பஹா, களனி கல்வி வலயங்கள் மற்றும் கடுவெல கல்வி கோட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (07.03) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக மாகாண கல்விப் பணிப்பாளரினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இரத்தினபுரி, கேகாலை, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தின் ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்த பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
(Visited 16 times, 1 visits today)