இலங்கை

இலங்கையின் பிரபல சுற்றுலாத் தளத்தை மூடுவதற்கு நடவடிக்கை!

சிகிரியாவை சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிகமாக மூடுவதற்கு மத்திய கலாசார நிதியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சிகிரியாவை பார்வையிடச் சென்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குளவி கொட்டுக்கு இலக்கானதை தொடர்ந்து மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்று (14) பிற்பகல் குளவி தாக்கியதில் 26 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் 13 உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் சீகிரிய கிராமிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நாட்களில் அதிக வெயில் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகளவில் காணப்படுவதே குளவிகள் கிளப்புவதற்கு காரணம் என சுற்றுலா வழிகாட்டிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த மத்திய கலாசார நிதியத்தின் சீகிரி திட்ட முகாமையாளர் துசித ஹேரத், குளவிகள் தாக்கிய நேரத்தில் சீகிரியாவை பார்வையிடுவதற்கு பயணச் சீட்டுகளை பெற்று உள்ளே செல்ல முடியாதவர்களின் பணத்தை மீள வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கின்றார். .

(Visited 5 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!