இலங்கை செய்தி

உலக புகழ்பெற்ற பொப் பாடகரை இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை

உலகப் புகழ்பெற்ற பொப் பாடகர் எட் ஷீரனின் இசைக் கச்சேரியை அடுத்த வருடத்தின் முதல் பாதியில் இலங்கையில் நடத்துவதற்கு இரண்டு தனியார் நிறுவனங்கள் முன்மொழிந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

2025 ஜனவரியில் கொழும்பில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்த இசை நிகழ்ச்சியை Cinnamon Life மற்றும் Bookmyshow இணைந்து நடத்த முன்வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த இசை நிகழ்ச்சியை நடத்துவதற்கான தீர்மானம் இன்னும் கலந்துரையாடலில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பல வருடங்களின் பின்னர் இலங்கைக்கு வரும் முதலாவது சர்வதேச பாடகர் எட் ஷீரன் என ஹரின் பெர்னாண்டோ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு துறையை அபிவிருத்தி செய்யும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் இவ்வாறான வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.

(Visited 1 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content