இலங்கையில் பாடசாலைகளில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

இலங்கையில் ஒக்டோபர் மாதம் பாடசாலை சுகாதார மேம்பாட்டு மாதமாக பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த மாதம் 02 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வாரத்திற்கு ஒரு கருப்பொருளை தெரிவு செய்து பாடசாலைகளில் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
(Visited 14 times, 1 visits today)