ஐரோப்பா

பிரான்ஸில் கைது செய்யப்பட்ட Telegram நிறுவனர் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை

பிரான்ஸில் கைது செய்யப்பட்Telegram செயலியைத் தோற்றுவித்த பேவல் டூரோவின் தடுப்புக் காவலை நீட்டிப்பதற்கு பிரெஞ்சு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

39 வயது செல்வந்தர் டூரோவின் Telegram தளங்களில் குற்ற நடவடிக்கைகள் இடம்பெறுவதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

வார இறுதியில் கைதுசெய்யப்பட்ட அவர், 4 நாட்கள் வரை விசாரணைக்காகத் தடுப்புக் காவலில் வைக்கப்படக்கூடும். விசாரணையின் முடிவில் டூரோவ் விடுதலை செய்யப்படலாம் அல்லது அவர் மீது குற்றம் சுமத்தப்படலாம்.

இதற்கிடையே, பிரெஞ்சு அதிபர் இம்மானுவல் மெக்ரோன் டூரோவ் கைது செய்யப்பட்டதில் அரசியல் நோக்கம் இருப்பதாகக் கூறப்படுவதை மறுத்துள்ளார்.

டூரோவ் விவகாரத்தின் முடிவு, நீதிபதிகளின் கையில் இருக்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

(Visited 14 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்