ஐரோப்பா

ஜெர்மனியில் குறைந்த ஊதியம் பெறும் பெண்களுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை

ஜெர்மனியில் பெண்கள் குறைந்தளவு ஓய்வூதியத்தை பெறுகின்ற காரணத்தினால் பொருளாதாரத்தில் நலிவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் தற்போதைய அரசாங்கமானது பெண்களுக்கான அடிப்படை ஓய்வூதியம் ஒன்றை அறிமுகம்படுத்தியுள்ளது.

ஜெர்மன் அரசாங்கமானது 2025 ஆம் ஆண்டுக்குரிய தனது வரவு செலவு திட்டத்தை நிறைவேற்றுதலில் பாரிய சிக்கலில் சிக்கியுள்ள காரணத்தினால் தற்பொழுது கூடுதலான பணத்தை சேகரிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதனால் பெண்களுக்கான கூடுதலாக வழங்கப்படுகின்ற பணத்தை நிறுத்த கூடிய வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெர்மனியின் நிதி அமைச்சர் கிறிஸ்டியான் லின் அவர்கள் பெண்களுக்காக கூடுதலாக வழங்கப்பட்ட மாதாந்தம் கொடுப்பனவான 107 யுரோக்களை நிறுத்துவதற்கு உத்தேசித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

அரசாங்கமானது பெண்களுக்கான மேலதிக ஓய்வு ஊதியத்துக்காக வருடாந்தம் 14 பில்லியன் யுரோக்களை செலவீடு செய்வதாகவும், இந்த மேலதிக ஓய்வு ஊதிய பணத்தை இடை நிறுத்தினால் 90 லட்ச பெண்கள் பாதிக்கபட நேரிடும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

அதனால் இந்த திட்டத்தை நடைமுறைபடுத்துவதற்கு முன் அரசாங்கமானது பல ஆய்வுகளை மேற்கொண்டு தகுந்த நடவடிக்கையை எடுக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

(Visited 29 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!