இலங்கை

இலங்கை – புதிய அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை : அதிர்ச்சியில் மத்திய வங்கியின் ஆளுநர்கள்!

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர்களின் ஓய்வூதியம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், முன்னாள் ஆளுனர்கள் அல்லது எதிர்கால ஆளுநருக்கு ஓய்வூதியம் கிடைக்காது.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர்கள் சபையின் தலைவரும் மத்திய வங்கியின் ஆளுநருமான கலாநிதி நந்தலால் வீரசிங்க இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

அந்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், கடந்த செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மத்திய வங்கி ஆளுநர்களின் ஓய்வூதியம் இரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் ஆளுனர்களின் ஓய்வூதியம் 1998 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி இரத்து செய்யப்பட்டு பின்னர் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் மீண்டும் செயற்படுத்தப்பட்டது.

இதன்படி, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர்களும் 2015 ஜனவரி 1ஆம் திகதி முதல் மாதாந்த ஓய்வூதியத்தை பெற்றுக்கொண்டனர்.

இது மத்திய வங்கியின் ஆளுநருக்கு அவரது கடைசி அடிப்படைச் சம்பளத்தில் 74 சதவீதத்திற்குச் சமமான மாதாந்திர ஓய்வூதியத்தைப் பெறுவதற்கான உரிமையை அவரது சேவை ஆண்டுகளைப் பொருட்படுத்தாது.

See also  பரபரப்பிற்கு மத்தியில் இஸ்ரேல் நோக்கி பயணிக்கும் நூற்றுக் கணக்கான இலங்கையர்கள்

புதிய வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், இனிமேல் எந்தவொரு மத்திய வங்கி ஆளுநருக்கும் ஓய்வூதியம் வழங்கப்பட மாட்டாது.

(Visited 1 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content