இலங்கை செய்தி

ஸ்ரீ லங்கன் விமான சேவையின் பங்குகள் தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி தீர்மானம்

ஸ்ரீ லங்கன் விமான சேவையின் பங்குகளின் 51 சதவீதத்தை விற்பனை செய்ய கடந்த அரசாங்கம் தீர்மானம் மேற்கொண்டிருந்தது.

எனினும் அதனை நிறுத்துவதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் முதலாவது அமைச்சரவை கூட்டத்தின் போதே, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் குறிப்பிடுகின்றன.

ஸ்ரீ லங்கன் விமான சேவையின் பங்குகளை விற்பனை செய்ய அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு பிரிவு நடவடிக்கை எடுத்திருந்தது.

இதற்கமைய, தனியார் முதலீட்டாளர்களை இணைத்துக்கொள்வதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இதனைக் கைவிட்டு ஸ்ரீ லங்கன் விமான சேவையின் முகாமைத்துவத்தை செயற்திறன் மிக்கதாக மாற்றுவது தொடர்பில் தற்போதைய அரசாங்கத்தினால் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 20 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!