ஆசியா

சிங்கப்பூரில் அதிரடி நடவடிக்கை – 80,000 தொலைபேசி எண்களுக்கு தடை!

சிங்கப்பூரில் ScamShield செயலி கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து, சுமார் 80,000 தொலைபேசி எண்களை தடை செய்துள்ளது.

அத்துடன் அந்த எண்களை, தடைசெய்யப்பட்ட பட்டியலில் சேர்த்துள்ளது. அத்துடன் சுமார் 5 மில்லியன் குறுஞ்செய்திகளை மோசடித் தகவல் என செயலி அடையாளம் கண்டுள்ளது.

ScamShield செயலி சென்ற மாத நிலவரப்படி 750,000 முறை பதிவிறக்கம் செய்யப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. செயலியில் மேம்பாடுகள் செய்யப்படுகின்றது.

நச்சு நிரல்களை அடையாளம் காணும் மற்ற செயலிகளுக்கு ScamShield ஆதரவாகச் செயல்படுகிறது.
நச்சு நிரல்களை அடையாளம் காணவோ தடுக்கவோ ScamShield செயலியால் இயலாது.

ஆனால் அது போலிக் குறுஞ்செய்திகள், அழைப்புகள் ஆகியவற்றைத் தடுத்து, மோசடிச் சம்பவங்களுக்கு இட்டுச்செல்லும் நடவடிக்கைகளிலிருந்து மக்களைப் பாதுகாக்கிறது. புதிய தொடர்புக் கருவிகளின் விற்பனைக்கு முன்பாகவே அவற்றில் ScamShield செயலியைப் பதிவிறக்கம் செய்யும் சாத்தியம் குறித்து மன்றத்தில் கேட்கப்பட்டது.

எல்லா வாடிக்கையாளர்களும் அதற்கு இணங்குவார்கள் என்று கூறமுடியாதென தெரிவிக்கப்படுகின்றது.

(Visited 8 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!