சீனாவின் உரிமைக்கோரலுக்கு எதிரான நடவடிக்கை போருக்கான அழைப்பாகவே கருதப்படும் – சி ஜின்பிங்!
தைவானுடன் போர் மூளும்போது பல சீனர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சீன ஜனாதிபதி சி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
சீனாவின் உரிமைகோரலுக்கு சவாலாக கருதப்படும் எந்தவொரு நடவடிக்கையும் போருக்கான அழைப்புகளாகவே கருதப்படும் எனவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீனக் கொள்கை வகுப்பாளர்கள் தங்கள் பொதுமக்களின் தேசியவாதத்திற்கும் அது தோற்றுவித்த போர்க்குணத்திற்கும் சலுகைகளை வழங்கக்கூடும் என்று கவலைப்படுகிறார்கள் எனத் தெரிவித்த அவர், மேற்கு நாடுகள் கவலைப்படுவது சரியானது என்று சுட்டிக்காட்டினார்.
தைவானைப் பொறுத்தவரை, சீன குடிமக்களின் கருத்துகளை “மீற முடியாது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 10 times, 1 visits today)