ஆன்மிகம் இலங்கை புகைப்பட தொகுப்பு

தேரேறி வருகின்றாள் அச்சுவேலி பத்தமேனி ஸ்ரீ வடபத்திர காளியம்மாள்….

அச்சுவேலி என்பது இலங்கையின் வட மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் கிழக்கு பகுதியில் உள்ள கிராமமாகும்.

இக்கிராமத்தின் வடக்கே தொண்டைமானாறும், தெற்கே ஆவரங்காலும், மேற்கே ஓட்டகப்புலம், வசாவிளானும், கிழக்கே வல்லை கடலின் தொடர்ச்சியுடன் கூடிய பரந்த வயல் வெளியும் பற்றைக் காடுகளும் காணப்படுகின்றன.

இங்கு வசிப்பவர்கள் பெருமளவு விவசாயப் பின்னணியை கொண்டவர்களாகவே காணப்படுகின்றனர்.

இந்து, கிறித்தவ மதங்களை பின்பற்றி வருகின்றனர். பல இந்து ஆலயங்கள் காணப்படுவதுடன் அதில் அச்சுவேலி பத்தமேனி ஸ்ரீ வடபத்திர காளியம்மாள் ஆலயம் மிகவும் பிரத்திபெற்றது.

இந்த ஆலயத்தின் தேர் திருவிழா இன்று இடம்பெற்றது.

இதன்போது பெருமளவான மக்கள் கலந்துகொண்டதுடன், தேர் இழுத்தும் தமது பக்தியை வெளிப்படுத்தினர்.

இதேவேளை, சில பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்து தமது நேர்த்திக்கடன்களை செலுத்துவதையும் காணக்கூடியதாக இருந்தது.

 

MP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!