இலங்கை செய்தி

அநுரகுமார அரசின் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுக்கள்

புதிய ஜனாதிபதி அநுரகுமார பதவியேற்றவுடன் உடனடியாக நிறைவேற்றப்படும் என தேர்தல் பிரசாரத்தின்போது வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எதனையும் இதுவரை நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சி பிரதிநிதிகள் தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியில் மதுபானம் விற்பனை உரிமம் பெற்ற முன்னாள் அமைச்சர்களின் பெயர்களை வெளியிடுவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் அந்தக் கட்சியின் தலைவர்கள் இருவரும் மக்களுக்கு உறுதியளித்தனர்.

ஆனால், இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் இருப்பதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும், முன்னாள் ஜனாதிபதியுடன் ஒத்துழைத்து மில்லியன் கணக்கில் பரவலாக்கப்பட்ட நிதியைப் பெற்ற எதிர்க்கட்சி எம்.பி.க்களின் பட்டியலை வெளியிடவும் உறுதியளித்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

ஆனால் இந்தப் பட்டியல் இதுவரை பகிரங்கப்படுத்தப்படவில்லை.

ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்ததும் தவறு செய்தவர்களுக்கு உடனடியாக தண்டனை வழங்குவதாக உறுதியளித்த போதிலும், கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற பாரிய மோசடிகள் அல்லது ஊழல்கள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஒரு சில விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டாலும், கடுமையான ஊழல் வழக்குகள் தொடர்பாக அரசாங்கம் எந்த அர்த்தமுள்ள நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர்கள் வாதிடுகின்றனர்.

(Visited 2 times, 2 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content