பிரித்தானியாவில் A1 நெடுஞ்சாலையில் விபத்து – சாரதிகளிடம் விசேட கோரிக்கை!

பிரித்தானியாவில் A1 நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் ஐந்துபேர் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
இரண்டு அடையாளம் தெரியாத கார்களும் பயங்கர விபத்தில் சிக்கியுள்ளதாகத் தெரிகிறது.
நியூகேஸில், டென்டன் அருகே வடக்கு நோக்கிச் செல்லும் வண்டிப்பாதையில் அதிகாலை 2.30 மணியளவில் இந்த மோதல் நிகழ்ந்தது.
குறித்த விபத்து காரணமாக அப்பகுதியூடான போக்குவரத்து தடைபட்டுள்ளதாகவும் சாரதிகள் மாற்று பாதைகளை பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் விபத்து குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
(Visited 26 times, 1 visits today)