காலி – கொழும்பு பிரதான வீதியில் விபத்து : ஒருவர் உயிரிழப்பு!
![](https://iftamil.com/wp-content/uploads/2023/09/கொழும்பு-jpg.webp)
காலி – கொழும்பு பிரதான வீதியின் களுத்துறை வாடியமன்கட சந்தியில் முச்சக்கரவண்டியும் பேருந்தொன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் களுத்துறை வஸ்கடுவ பிரதேசத்தில் வசிக்கும் 52 வயதுடைய சுகத் தயானந்த சில்வா என்ற நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முச்சக்கர வண்டி சாரதியான இவர், வாடகை வண்டியில் பயணித்த வேளையில் இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கரவண்டி பாணந்துறையிலிருந்து களுத்துறை நோக்கி அதிவேகமாக பயணித்ததால் வேக கட்டுப்பாட்டை இழந்த இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
(Visited 4 times, 1 visits today)