இலங்கை

காலி – கொழும்பு பிரதான வீதியில் விபத்து : ஒருவர் உயிரிழப்பு!

காலி – கொழும்பு பிரதான வீதியின் களுத்துறை வாடியமன்கட சந்தியில் முச்சக்கரவண்டியும் பேருந்தொன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில்  களுத்துறை வஸ்கடுவ பிரதேசத்தில் வசிக்கும் 52 வயதுடைய சுகத் தயானந்த சில்வா என்ற நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முச்சக்கர வண்டி சாரதியான இவர், வாடகை வண்டியில் பயணித்த வேளையில் இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டி பாணந்துறையிலிருந்து களுத்துறை நோக்கி அதிவேகமாக பயணித்ததால் வேக கட்டுப்பாட்டை இழந்த இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!