பம்பலப்பிட்டி கடற்கரை வீதியில் கோர விபத்தை ஏற்படுத்திய லொரி
பம்பலப்பிட்டி கடற்கரை வீதியில் இன்று (06) அதிகாலை 2:30 மணியளவில் பாரிய விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெள்ளவத்தை திசையிலிருந்து கொள்ளுப்பிட்டி நோக்கி வேகமாக வந்த லொரி ஒன்று வீதியின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 2 மோட்டார் வாகனங்கள் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் வாகனங்களுடன் மோதிய லொரி ரயில் தண்டவாளத்தில் நின்றுள்ளது.
பம்பலப்பிட்டி பொலிஸார் இந்த விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





